மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 16 பேர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே 9 அமைதியின்மை தொடர்பில், இதுவரையில் 857 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2,814 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 92 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது