1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த சில நாட்களாக ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் புதிதாக ரயில்களை சேவையில் இணைப்பதற்கும் தற்போது சேவையில்
ஈடுபடும் ரயில்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது
முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

காலை 7 மணி முதல் காலை 8.30-க்கு இடைப்பட்ட நேரத்திலும் மாலை வேளைகளிலும் அதிகமான பயணிகள் பயணிப்பதால், குறித்த காலப்பகுதியில் கூடுதலான சேவைகளை வழங்கவும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இதனை தவிர, காலியிலிருந்தும், யாழ்ப்பாணத்தை நோக்கியும் அலுவலக ரயில்களை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களத்திடம் எதிர்வரும் நாட்களுக்கு போதுமான எரிபொருள்
கையிருப்பிலுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி