பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொதுநலவாய நாடுகள் உட்பட பலதரப்பு அமைப்புகள் ஊடான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் G.L. பீரிஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொமினிக் தீவுகள் , சீஷெல்ஸ், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் சுற்றுலாத்துறை தொடர்பிலும் பேராசிரியர் G.L. பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.
2022 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பிற்கு இணையாக ருவாண்டாவின் கியாலியில் பேராசிரியர் G.L. பீரிஸ் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.