அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே தொடர்ந்தும் எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது
.
இதேவைள இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன் முதல் கப்பல் எதிர்வரும் 6ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும், எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.