ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், முறைப்பாடு செய்வதற்கும் ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்
.
ரயில் புறப்படும் நேரம், ஆசனங்களை ஒதுக்குதல், ரயில் கட்டணம் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு சேவை, ரயில் குறுக்குப் பாதையில் இடம்பெறும் சிக்கல்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் குறைபாடுகளையும் இதன்மூலம் முன்வைக்க முடியும். மும்மொழிகளிலும் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.