கொழும்பு - கொள்ளுப்பிட்டி - ஃப்ளவர் வீதியில், பிரதமர் காரியாலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள், இன்று முற்பகல் பிரதமர் காரியாலயம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதையடுத்து, பிரதமர் காரியாலத்திற்குள் பிரவேசிக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். இதன்போது, அவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை மறறும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.