முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் நாடு திரும்புவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா செல்லவுள்ளார். இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருந்து அதன் பின்னர் நாட்டிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது மகனின் பாதுகாப்பு கருதி அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் தெரிவித்தார்.
இதேவேளை, தனது அதிகபட்ச ஆற்றலுடன் சேவையாற்றியதைப் போன்று, தான் பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்