அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தபால் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று(20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடுகளுக்கான அஞ்சல் விநியோகங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, வெளிநாட்டு தபால்களுக்கான கட்டணங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.