இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதிய முன்மொழிவின் கீழ், மின்சார சபை, உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் என தனிப் பிரிவுகளாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியுடன் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டமாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.