கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெத்தும் கேர்னரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.