தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கண்டி வடக்கு ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் நவயாலதென்ன பிரதேசத்துக்கு குழாய்நீர் இணைப்பு வழங்கப்படவுள்ளதால் நாளை (18) வியாழக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் நாளை மறுதினம் (19) காலை 7 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய கீழ்வரும் குறித்த காலப்பகுதியில் கீழ்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- உடதலவின்ன
- வத்தேகெதர
- கங்கா மாவத்தை
- நவயாலதென்ன
- சரசவி மாவத்தை
- கலதெனிய
- இந்திரா மாவத்தை
- பல்லேதலவின்ன
- உஸ்ஸியாகொட
- வத்தளவத்தை
- பொல்கொல்ல
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.