அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது, கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.