அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 16 பேரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வசந்த முதலிகே உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்போவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.