பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி ஆற்றில் தள்ளிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பிரதேச சபை உறுப்பினரிடம் பெண் பணம் மற்றும் சொத்துக்களையும் கொள்ளையடித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து தாக்கி காயப்படுத்தி,அவரை பெரே வாவியில் தள்ளியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.