கம்பஹா – மாக்கவிட்ட, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 34 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.