நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பல வர்த்தக நிலையங்களில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் நேற்று(29) பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.