மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மித்தெனிய சதொஸ்மாதாகம பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.