கடந்த மே மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று(07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 மற்றும் 23 வயதான ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு(07) உயன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.