பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபக்குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் முன்னுரிமை தீர்மானங்களை அங்கீகரிக்கவும் இனங்காண்பதற்கும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.