நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய தூதுவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்த போது தமது நற்சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.