கிரிக்கெட், வலைப்பந்து இரண்டு ஆசிய கிண்ணங்களை தனதாக்கிக் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து அணிகளை இலங்கை மக்கள் கொண்டி வருகின்றனர்.
இதில் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பிடித்த வீரராக கொண்டாடப்படுகிறார். இதில் விசேட அம்சம் என்னவெனில், வலைப்பந்து அணியின் யாழில் பிறந்த சிவலிங்கம் தர்ஜினி கொண்டாடப்படுகிறார். தர்ஜினி இன்றி இந்த வெற்றி சாத்தியமில்லை, நம்பிக்கை நட்சத்திரம் தர்ஜினி உள்ளிட்ட பெருமைகளையும் சிங்களவர்கள் பேசிவருகிறார்கள்.
சிங்கள மக்கள் பெருமையுடன் பேசுவதைக் கேட்கமுடிகிறது. அந்த வீராங்கணை கொண்டாடப்படுவதைப் பார்க்க முடிகிறது. வலைப்பந்து அணி வெற்றியுடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு படத்தில் தர்ஜினி விடுவிட்டுள்ளார் என்பதை பலர் சுட்டிக்காட்டினார்கள்.
அதனைவிட தர்ஜினியின் படங்களை செயார் செய்து, பாராட்டி, பெருமை கொண்டாடி வருகிறார்கள்.
யாழ் மண்ணில், பனைகளுக்கு மத்தியில் பிறந்த பெருமை நீ 'சிவலிங்கம் தங்கச்சி' என்ற வாசகத்தோடு இந்தப் படத்தை பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்கள் பகிர்ந்து, பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையின் பெருமை நீ! இன்னும் வெற்றிகள் பெற வாழ்த்துகிறது தமிழ் லீடர்.
உள்ளக அரசியல் செய்திகளை அறிந்துகொள்ள
https://chat.whatsapp.com/DDOqYGvOhPq3hX0ZAOU3Ki