முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,
ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதா ஆணைக்குழு ஆகியன முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுவரை இந்த நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் இருந்தன.