தேசிய சபையில் பங்கேற்பதை தவிர்க்க தீர்மானித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலை வணங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் மற்றும் தேசிய சபை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து விலகி இருக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தாலும், தேசத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு சாதகமான கொள்கை முடிவுகளிலும் குறுகிய அரசியல் நலன்களைப் பொருட்படுத்தாது எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுவோம் என்பதை இங்கு அவர்கள் காட்டியுள்ளனர்.