மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.