அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு (COPE) உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் நேற்று (18) ஆரம்பித்த நிலையில், பிரதி சபா நாயகர் அஜித் ராஜபக்ச இதுகுறித்து அறிவித்தார்.
இந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பெயரிடப்பட்டுள்ளார்.