கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணிமுதல் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.