கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (08) கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (09) காலை முதல் மீண்டும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக இன்று பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.