முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போதே நீதவான் இவ்வாறு விடுவித்துள்ளார்.
இதற்கமைய 15 பேரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை இவர்கள் நேற்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தியமை குறிப்பிடதக்கது