நாளையும் (26) நாளை மறுதினமும் (27) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த இரு தினங்களிலும் 02 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, A முதல் W வரையிலான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.