ருஹுனு தேசிய கல்வியியல் கல்லூரியில் இரு மாணவர் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இறுதி வருட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்கள் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்த மாணவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.