யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு டிக் டொக்
காணொளி எடுக்க முயன்ற இளைஞன் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று நேற்று (01) பதிவாகியுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்துள்ளார்.
அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும் பாதுகாப்புத் தரப்பினரும், கடலில் விழுந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.