கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கட்டாயம் தகனம் செய்ய
வேண்டுமென்று அரசாங்கத்துக்கு தவறான ஆலோசனையை வழங்கியவர்கள் யாரென்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
'கடந்த கொவிட் காலத்தின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற பிரச்சினை எழுந்த போது, தகனம் செய்யுமாறே அமைச்சுக்கு சிலர் ஆலோசனை வழங்கினர் என்று சுகாதார அமைச்சரே சபையில் குறிப்பிட்டார்' என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், மன்றில் எடுத்துரைத்தார்.