வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தைத் துரிதமாக நிறைவு
செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குமென்று தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், “எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள்” என்றும் மன்றில் மன்றாடினார்.
“எவ்விதத் திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும். புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்பட மாட்டாது” என, வீடமைப்புத்துறை அமைச்சர் இதன்போது சபையில் தெரிவித்தார்.