இலங்கைப் பொலிஸின் குதிரைப் படையில் காணப்படும் அதிக விலைமதிப்புள்ள 7 கம்பீரமான குதிரைகள்
உயிரிழந்துள்ளன என்று லீடர் ரெட் அலர்ட் பகுதி செய்தி வெளியிட்டுள்ளது.
உரிய முறையில் உணவு கிடைக்காமையாலேயே அந்தக் குதிரைகள் மரணித்துள்ளன என்றும் குதிரைகளுக்கான உணவுக் கொள்வனவில் பாரிய நிதி மோசடி ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் குதிரைப்படையைச் சேர்ந்த குதிரைகளுக்கு உணவு விநியோகிக்கும் சரியான விலாசம்கூட இல்லாத கொழும்பு கடை யாருக்குச் சொந்தமானது என்ற கேள்வியும் இதன்போது எழுப்பப்பட்டுள்ளது.