வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் உழைக்கப்பட்டு நாட்டுக்கு அனுப்பப்படும் அந்நியச்
செலாவணி மீது வரி அறவிடப்படுகிறது அல்லது அவை பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படுகின்றன என்று பரப்பப்பட்டு வரும் செய்தி வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, அந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றுள்ள மத்திய வங்கி, அந்நியச் செலாவணி மீது எந்தவொரு வரியும் விதிக்கப்படுவதில்லை என்றும் வெளிநாடுகளில் உழைத்து அனுப்பும் பணத்தை ரூபாயாக மாற்றுவதோ அல்லது தமது வங்கிக் கணக்குகளில் பேணிப் பாதுகாப்பதோ அவரவர் உரிமை மற்றும் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளது.