தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி, நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கின்றார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைத் தொடர்புகொண்டு அத்திகதியில் அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தனவை அவர் பணித்திருக்கிறார்.
கடந்த வெள்ளியன்று தம்மைச் சந்தித்த சிறபான்மை இனத் தரப்பின் கட்சித் தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதியே நேரடியாக இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் என்று அறியவந்துள்ளது.