உள்நாட்டு சுகாதாரக் கட்டமைப்பினால், எதிர்வரும் வருடத்தில் எந்தத் தட்டுப்பாடுமின்றி மருந்து
வகைகளை வழங்க முடியுமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்காக, நீண்டகால, குறுகியகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ், எதிர்காலத்தில் மருந்துக் கொள்வனவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களக்குள் மருந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.