ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ததால்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் இப்போது அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் கோட்டாபய ராஜபக். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக அல்லது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகச் செல்வதற்கு விருப்பம் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா விசாவிலாவது அமெரிக்கா செல்வதென்று முடிவெடுத்து, அதற்கு அவர் விண்ணப்பித்துள்ளார் என்றும் அதுவும் இப்போது தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கவலையில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை, அமெரிக்காவில் இருக்கும் அவரது பிள்ளைகள் ஆறுதல்படுத்தி வருகின்றனர் என்றும் விசா கிடைக்கும் வரை அவர்கள் இலங்கை வந்து அவருடன் சில நாட்கள் தங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.