அடுத்த வருடம் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் என எதிர்பார்க்க முடியாது என
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறையினால் அரசாங்கக் கடன் மேலும் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த வருடத்திற்குள் நாட்டின் விவசாயத்தில் ஓரளவு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.