இந்திய ரூபாயில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கை
வங்கியொன்று ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியாவில் வொஸ்ட்ரோ கணக்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஸ்டேட் பாங்க் ஒஃப் இந்தியா தெற்காசிய பிராந்தியத் தலைவர் விகாஸ் கோயலுடன் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் என்றும், உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.