LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் குவாலிபயர் 01 போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நேற்றைய போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Kandy Falcons அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி, 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டியைத் தொடர முடியாததால் DLS முறைப்படி Jaffna Kings அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டார்.