ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நேர்முகப்பரீட்சை நாளை (4) பிட்டகோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.