தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் ஆகிய தரப்புகள் விக்னேஸ்வரன் தலைமையிலான
தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக்கட்சிகள் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளன.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சந்திப்பில் தேர்தல் கூட்டு தொடர்பிலும் பேசப்பட்டதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக விரைவில் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.