காங்கேசன்துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ள நிலையில் பயணிகளின்
சோதனைக்கு உலோகம் மற்றும் பிற பொருட்களை (metal and other material) பாதுகாப்பு ஸ்கானிங் செய்ய இரண்டு இயந்திரங்கள் தேவை, இந்த இயந்திரங்களை விரைவாக கொள்வனவு செய்யுமாறு துறைமுக கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
IOM இன் நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலத்திரனியல் நுழைவாயில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதில் வருகை முனையத்தில் இதுபோன்ற இரண்டு மின்னணு வாயில்களையும், புறப்பாடு முனையத்தில் இரண்டையும் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பால் (IOM) ஒதுக்கப்படும் என்றும், செயல்முறை சுமார் ஒரு வருடம் ஆகும் என்றும் கலந்துரையாடல்களில் தெரியவந்துள்ளது.
இதில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, IOM இன் தேசிய நிகழ்ச்சித் திட்ட அதிகாரி - நேஷன் குணசேகர, விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) (தனியார்) லிமிடெட் தலைவர் - (ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்) G.A .சந்திரசிறி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) உப தலைவர் கயான் அல்கேவத்தகே, சட்டத்தரணி. SLPA இன் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள்) பிரபாத் ஜயந்த மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.