உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் 80 ஆயிரம் வேட்பாளர்களில் 20 ஆயிரம் வேட்பாளர்கள், பல்வேறு
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான கடைகளை உறவினர்களுக்கு வாடகைக்கு விட்டமை, முறையற்ற விதத்தில் ஒப்பந்தங்களை வழங்கியமை, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, தரமற்ற பாதைகளை நிர்மாணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்று, ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.