அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக, கொழும்பில் இன்று (22) தொழிற்சங்கப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் இணைய உள்ளனர் என்று, அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஷமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
"இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள். இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.