இந்தியாவில் இன்று காலை 9:03 க்கு 3.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
இதேவேளை வட இந்தியாவில் 8 மெக்னிடியூடுக்கு மேல் நில அதிர்வு ஏற்படுமாக இருந்தால் அது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும் உணரப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.