மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் காரணமாக தினமும் வழங்கப்படும் கலால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.