1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் படைத்த சாதனை


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

42 வயதான பிரவீனா நிமாலி மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த மரதன் போட்டி பாரிஸ் நகரின் மையப் பகுதியில் தொடங்கி, பாரிஸில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாரிஸ் நகரைச் சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டதுடன், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் விசேட பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த மாரத்தானின் போது, ​​பாரிஸ் நகரில் வசிக்கும் சுமார் 20,000 பேருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தெளிவை ஏற்படுத்த போட்டி அமைப்பாளர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி