1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பின்னவல மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



பின்னவல பெட்ரோஷோ சரணாலயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காணாமல் போனதாக கடந்த 16ஆம் திகதி பின்னவல பொலிஸில் அவரது தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, மஹாஓயா பதியத்தலாவ வீதியின் 66 ஆவது தூண் தேக்கவத்தை வீதியின் பாலத்திற்கு அருகில் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியொன்று காணப்பட்டதாகவும், 41 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்த விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி